இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதியின் கொடூரமான செயல்
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு தம்பதி ஒன்று மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காலி, உனவட்டுன பிரதேசத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த தம்பதியையும் அவர்களின் நாயையும், குறித்த வெளிநாட்டு தம்பதி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர்கள் செல்லும் போது நாய் குரைத்தமையினால் கோபமடைந்த நாயையும் வீட்டு உரிமையாளரையும் தாக்கியுள்ளனர்.
வெளிநாட்டு தம்பதி
இது தொடர்பில் கேட்க சென்ற நாயின் உரிமையாளரை கற்களால் தாக்கியதால் அவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்கியதன் பின்னர் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் உக்ரைனியர்கள் என அந்த தம்பதி கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் முழுமையாக காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri