உலகின் மிக நீளமான கடல் கடந்த அதிவேக தொடருந்து பாலத்தின் பணிகள் நிறைவு
சீனாவின் ஹான்ஜோவ் வளைகுடா (Hangzhou Bay)குறுக்கே அமைக்கப்பட்டு வரும் உலகின் மிக நீளமான கடல் கடந்த அதிவேக தொடருந்து பாலத்தின் முக்கிய தூண்களின் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த பாலாம் சுமார் 29.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
கட்டுமானப் பணிகள்
இந்தப் பாலத்தின் வழியாக அதிவேக தொடருந்துகள் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், ஹான்ஜோவ் வளைகுடாவைக் கடப்பதற்கான பயண நேரம் வெறும் 10 நிமிடங்களாகக் குறையும்.
2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன பொறியியல் தொழில்நுட்பத்தின் உச்சமாகத் திகழும் இத்திட்டம், சீனாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri