உலகின் மிக நீளமான கடல் கடந்த அதிவேக தொடருந்து பாலத்தின் பணிகள் நிறைவு
சீனாவின் ஹான்ஜோவ் வளைகுடா (Hangzhou Bay)குறுக்கே அமைக்கப்பட்டு வரும் உலகின் மிக நீளமான கடல் கடந்த அதிவேக தொடருந்து பாலத்தின் முக்கிய தூண்களின் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த பாலாம் சுமார் 29.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
கட்டுமானப் பணிகள்
இந்தப் பாலத்தின் வழியாக அதிவேக தொடருந்துகள் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், ஹான்ஜோவ் வளைகுடாவைக் கடப்பதற்கான பயண நேரம் வெறும் 10 நிமிடங்களாகக் குறையும்.
2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன பொறியியல் தொழில்நுட்பத்தின் உச்சமாகத் திகழும் இத்திட்டம், சீனாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 4 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam