துரிதகதியில் இடம்பெற்றுவரும் வட்டுவாகல் பாலத்திற்கான வேலைகள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி துரிதகதியில் சீரமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடெங்கிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்த மழையினால் நீர் நிலைகளின் நீர்மட்டமானது வழமையை விட உயர்வடைந்திருந்தது.
பாலம் சேதம்
இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் குறித்த பாலம் பகுதியளவில் சேதமடைந்தது.
இதனால் குறித்த பாலத்தினுடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பின்னர் தற்காலிக வீதி புனரமைப்பின் மூலம் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
இந்நிலையில் குறித்த பாலத்தின் திருத்த வேலைகள் மிக துரித கதியில் இரவு பகலாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam