வவுனியா மெனிக்பாம் பாடசாலை வீதியை காபட் வீதியாக அமைக்கும் பணி ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் காபற் வீதி அமைக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் செட்டிகுளம், மெனிக்பாம் - பாடசாலை வீதியை காபற் வீதியாக அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் சிந்தனைக்கு அமைவாக நாடு முழுவதும் 1000 வீதிகளை காபற் வீதிகளாக மாற்றும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காபற் வீதியாக அமைக்கும் பணி
அதற்கு அமைவாக வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் - பாடசாலை வீதி காபற் வீதியாக அமைக்கும் பணியை கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
