மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்!

Jaffna M. K. Shivajilingam Mavai Senathirajah
By Dharu Feb 05, 2025 01:54 AM GMT
Report

யாழ். மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக போராளிகள் வருகை தந்தபோது தமிழ்ரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் அரசியல் பணி பாராட்டத்தக்கது என சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணம் தொடர்பில் அவர் வெளிப்படுத்திய முகநூல் பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,

சுதந்திர தின நிகழ்வில் கண்ணீர் சிந்திய பிரதி அமைச்சர்

சுதந்திர தின நிகழ்வில் கண்ணீர் சிந்திய பிரதி அமைச்சர்

சமாதான காலம்

“இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் சமாதான காலகட்டத்தில், யாழ் மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக போராளிகள் வருகை தந்து, மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பின்னர் தீவகத்திலும் அரசியல் பணி மேற்கொள்வதற்காக அரசியல் பணிமனையை ஆரம்பிப்பதற்காக தயார்படுத்தலை மேற்கொண்டோம்.

முதன் முதல் இரண்டு பேருந்துகளில் தீவகம் நோக்கி பயணித்தோம்.

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பருதி அண்ணா மற்றும். பாப்பா அண்ணா தலைமையில் சமகால அரசியல் போராளிகள் தீவாகத்திற்கு சென்றிருந்தோம்.

எங்களோடு மாவை ஐயாவும் சிவாஜிலிங்கம் ஐயாவும் வருகை தந்தார்கள்.

அன்று தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் தலைவர்கள் இருந்த பொழுதும் இவர்கள் இருவரை மட்டும் பிரத்யோகமாக எங்களோடு அழைத்துச் சென்றோம். 

இதன்போது அல்லைப்பிட்டி சோதனை சாவடியில் எங்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

அந்தச் சோதனை சாவடியில் இருந்த இராணுவ அதிகாரி எங்களுக்கான அனுமதியை தரவில்லை. எங்களை பயமுறுத்தும் விதமாக இராணுவத்தினரின் செயல்பாடுகள் இருந்தன எங்களை சுத்தி வளைத்து விட்டார்கள்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கண்காணிப்பு குழு 

30 நிமிடங்களை கடந்து அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தன. மாவை ஐயாவும் சிவாஜிலிங்கம் ஐயாவும் எங்களை வாகனத்தில் இருந்து இறங்க விடவில்லை. இறங்கிச் சென்ற மாவை ஐயா இராணுவத்தினருடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார். 

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

அவர் அன்று ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கூறிய வார்த்தைகள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆயுதம் இல்லாமல் குப்பியோடு வந்திருக்கிறார்கள் என்று உங்களுடைய வீரத்தை காட்டாதீர்கள் என சத்தமாக கத்தி பேசினார். 

உடனடியாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு மற்றும் 512 ஆவது இராணுவ தளத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

அவர்கள் வருகை தந்த பின்னர் எங்களுடைய பயணம் தொடர்ந்தது.

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

மீண்டும் பயணம் ஆரம்பித்ததும் மாவை ஐயாவின் துணிவை அரசியல் துறை பொறுப்பாளர் பாப்பா அண்ணா பாராட்டினார் குயிலன் அண்ணாவும் மாவை ஐயாவை பார்த்து நீங்கள் சரியான கோபக்காரர் போல் தெரிகிறது ஐயா என்றார்.

மேலும் ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் அறியாத விதத்தில் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இதற்காக பிரத்யோகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. பல படையணிகளை சார்ந்த போராளிகள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

அண்ணளவாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அறிக்கை தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவுகள் சிறப்பாக இருந்தன. சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவுக்கு அடுத்ததாக அதில் மாவை ஐயாவும் ஒருவர்.

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

மாவைக்கு பாராட்டு 

நான் குறிப்பிடும் தகவல்கள் சமாதான காலகட்டத்தின் தகவல்கள். தரவுகளை சேகரித்து அறிக்கை தயார் செய்த போராளிகளுக்கு மத்தியில், அறிக்கைகளை பார்வையிட்ட பின்னர் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அண்ணன் பாராட்டிய ஒருவரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ஐயாவும் ஒருவர்.

மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்! | Words From The Dead Mother

தரவுகள் அறிக்கையின் பிரகாரம் அதிக விமர்சனத்திற்கு உட்பட்ட ஒருவர் சம்பந்தன் ஐயாவாக இருந்தார்.

2009 யுத்தம் முடிவின் இறுதி காலகட்டமும் யுத்த முடிவின் பின்னர் அவருடைய இறுதி பதினைந்து ஆண்டுகளில் அவருடைய அரசியல் வாழ்வில் சில விமர்சனங்களை சந்தித்தாலும் தமிழ் மக்களுக்காக 50 ஆண்டுகளை கடந்த அரசியல் பயணம் பல தடவை மக்களின் பிரதிநிதியாக இனத்திற்காக பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த ஒரு அரசியல் தலைவர் மாவை ஐயா. அவருடைய ஆன்மா இளைப்பாறட்டும் பிரார்த்தித்துக் கொள்வோம்” என்றுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US