மகளிருக்கான ஐபிஎல் தொடரில் இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சாமரி அத்தபத்து சேர்க்கப்பட்டுள்ளார்,
மேலும் அவருக்கு 30 இலட்சம் ரூபா ஆரம்ப விலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சாமரி சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி
மேலும், மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி ஏலம் மும்பையில் இம்மாதம் 9ம் திகதி நடைபெற உள்ளது.
குறித்த ஏலத்தில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |