அனுதாபங்கள் மூலமே அரசியலுக்கு வரும் பெண்கள்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்
இலங்கையைப் பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் கணவன் அல்லது தந்தையின் மறைவுக்குப் பின்னரான அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரங்களுக்கு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (18.03.2023) வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற சமத்துவக் கட்சியின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையைப் பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் கணவன் அல்லது தந்தையின் மறைவுக்குப் பின்னரான அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரங்களுக்கு வந்துள்ளனர். இந்த நிலைமை மாற்றப்படவேண்டும் பெண்களின் அரசியல் அதிகாரங்களுக்கு ஆளுமையின் ஊடாக பிரவேசிக்க வேண்டும்.
பெண் வாக்காளர்கள்
உலகில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என நாம் பெருமைப்பட்டுக் கொள்கின்றோமே தவிர அரசியில் பெண்களுக்கு போதுமான வாய்ப்புக்களை வழங்குவதற்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை. ஒரு சில இஸ்ஸாமிய நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கள் போன்று கூட இலங்கையில் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குக்கரியது.
இலங்கையின் வாக்காளர்களில் அதிகளவில் பெண் வாக்காளர்கள் உள்ள போது இந்த வாய்ப்பு மறுப்பு என்பது தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. எங்களுடைய சமத்துவக் கட்சியைப் பொறுத்தவரைப் பெண்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்த கட்சியாகக் காணப்படுகின்றோம்.
உள்ளூராட்சி மன்றங்களில் கூட அதிகளவில் எங்களுடைய கட்சி பெண்களே உறுப்பினர்களாக உள்ளனர். நாம் கட்சியின் பெயரில் மாத்திரம் சமத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை செயற்பாடுகளிலும் அதனை நிரூபித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜாக்குவின் லூசியா
தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.














தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
