பௌர்ணமி தினத்தில் மதுபான போத்தல்களுடன் தமிழர் பகுதியில் பெண்ணொருவர் கைது..!
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனியன் கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(30.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
42 வயது பெண் கைது
இதன்போது, 72 பியர் ரின்கள், 25 கால் போத்தல் கொண்ட மதுபானங்களுடனான போத்தல்களை மீட்கப்பட்டுள்ளதுடன், 42 வயதுடைய பெண்ணொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவ தினமான நேற்று இரவு போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் முடியாமல் போனதை சமூகவலைத்தளங்கள் ஊடாக சாதிக்க முயற்சி - குற்றம் சாட்டும் தேரர்