டயகம பகுதியில் ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
Death
Police
Dayagama
Women Body
By Independent Writer
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று மாலை ஐந்து மணியளவில் மீட்கட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் சடலம் மிதப்பதை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டயகம 5 பிரிவை சேர்ந்த 53 வயதான சாமிநாதன் தங்கேஸ்வரி என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
படங்கள் - திருமால்
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |






மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US