லண்டனில் மகளை கொலை செய்த இலங்கை தமிழ் பெண்! - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
தனது மகளை படுககொலை செய்த இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு காலவரையற்ற மருத்துவமனை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சாயகி சிவானந்தம், 2020 ஜூன் 30ம் திகதி தெற்கு லண்டனில் உள்ள மிட்சமில் உள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மகள், தாய் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில், இரண்டு பேரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சாயகி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த பெண்ணுக்கு நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்ட நிலையிலேயே, அவரை குற்றவாளியாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தையின் தாயான சுதா சிவானந்தம் (36 வயது) கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருந்தார். நீதிபதி Wendy Joseph இந்த வழக்கை "ஒரு பயங்கரமான சோகம்" என்று வர்ணித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வாசிக்கப்பட்ட அறிக்கையில், சிறுமியின் தந்தை கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குடும்பம் "மிகவும் மகிழ்ச்சியான, நிறைவான மற்றும் ஆனந்தமான வாழ்க்கையை" அனுபவித்ததாகவும், அவரது மனைவி "தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு எதையும் செய்யும் ஒரு முன்மாதிரியான தாய்" என்றும் கூறினார்.
கோவிட் கட்டுப்பாடுகள் தனது மனைவியின் வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கோவிட் வைரஸ் தொடர்பில் அச்சம் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே, தனது மகளை படுககொலை செய்த சுதா சிவானந்தமை, ஒரு மனநல மருத்துவமனைக்கு காலவரையின்றி சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.