தேரர் கொலை தொடர்பில் பெண்ணொருவர் கைது - செய்திகளின் தொகுப்பு
மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியமை மற்றும் உண்மையை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அரலகங்வில - வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண், வெரகல - தேவகல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |