நாட்டை பாதுகாத்த படையினருக்கு துரோகம் இழைக்காதீர்!: விமல் கோரிக்கை (Video)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, இலங்கையின் சுமார் 50 படையதிகாரிகளுக்கு எதிராக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சில நாடுகளில் குறித்த படையதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இல்லையேல், நாட்டை பாதுகாத்த படையினருக்கு இது துரோகமாக இருக்கும் என்று விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,