ஈஸ்டர் தாக்குதலின் மூலதன உதவியாளர் நாட்டிற்குள்.. பகிரங்கப்படுத்திய விமல் வீரவன்ச
புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து (CID) வெளியேறினார்.
இரண்டாம் இணைப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் கூறிய கருத்து சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு தான் அழைக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்காவின் எப்பிஐ நிறுவனம், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலதன உதவி செய்தவர் ஹிப்ராஹிம் என்ற வர்த்தகர் என குறிப்பிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் போது அவரின் மகன்கள் இருவர் மற்றும் மருமகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மேலும், ஹிப்ராஹிம் சுதந்திரமாக நாட்டில் இருக்கிறார். குறித்த நபர் ஒரு காலத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியபட்டியலிலும் இடம்பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததாகும்.
ஹிப்ராஹிம் தொடர்பில் முன்னாள் குற்றபுலனாய்வு அதிகாரி நிலந்த ஜயவர்த்தன பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மேலும் அந்த அதிகாரி ஓய்வோதியம் கூட இல்லாமல் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தும் அறிவிக்காமல் இருந்தவர்கள் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அழைப்பு..
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
அதேவேளை, அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




