போராட்டத்தில் குதித்த விமல்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
கல்வி அமைச்சுக்கு முன்பாக விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ள போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில், சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்புடன், இன்று (12) காலை தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தை கவனத்தில் கொண்டு, கடுவெல நீதவான் நீதிமன்றம் ஒரு சிறப்பு உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சை நேரம்
அதன்படி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைமறியல் செய்வதைத் தவிர்க்குமாறு போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால், மாணவர்களுககு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தானும் தனது குழுவினரும் தொடங்கியது சத்தியாக்கிரகம் அல்ல, உண்ணாவிரதம் என்றும், உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் ஒன்றல்ல, இரண்டு என்றும் வலியுறுத்தினார்.
நீதிமன்றின் அறிவுறுத்தல்
இந்த நடவடிக்கையைத் தொடங்குவதற்கான காரணங்களை விளக்கிய அவர், முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கல்வி அமைச்சராகப் பணியாற்றும் தற்போதைய பிரதமரை அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் போராட்ட இயக்கம் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சத்தியாக்கிரகத்தை விட்டு வெளியேறும்போது அந்த இடத்தில் மற்றொரு குழு அமரத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan