சினிமா பாணியில் கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் பகீர் தகவல்
மொரட்டுவயில் வீடொன்றில் இன்று காலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
41 வயதான ஹரேந்திர குமார் என்ற பொடி அய்யா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தகாத காதல் உறவு
தகாத காதல் உறவின் அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலையின் பின்னர் மனைவி கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்துள்ளனர்.
இதன் போதே கணவர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. எனினும் விசாரனை போது மனைவியே இந்த கொலையை செய்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரவு 12.30 மணியளவில் கணவரின் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் மனைவி கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியதுடன் மனைவியின் சகோதரன் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.
கொலை செய்த மனைவி
குறித்த நபர் கொல்லப்படும் போது சுற்றுவட்டார மக்களுக்கு சத்தம் கேட்காத வகையில் பிரித் ஒளிபரப்பி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“நான் தொலைபேசியில் அழைக்கும் போது என்னை கட்டி வைத்துவிட்டு, வேறு யாரோ இந்த கொலையை செய்ததாக காட்டிவிடுவோம்” என தனது தம்பியிடம் அக்காக கோரியுள்ளார்.
மாமாவும், அம்மாவும் தந்தையை அடித்து கொலை செய்ததாக, இந்த சம்பவத்தை கட்டிலிலுக்கு கீழாக மறைந்திருந்து பார்த்த உயிரிழந்த நபரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam