ஜனாதிபதி சட்டத்தரணி சித்திரவதை செய்வதாக அவரது மனைவி முறைப்பாடு
ஜனாதிபதி சட்டத்தரணியான தனது கணவர் தம்மை துன்புறுத்துவதாகக் கூறி பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தம்மை தமது கணவர் துன்புறுத்துவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். தொடர்ச்சியாக கணவர் தம்மை துன்புறுத்தி வருவதனால் இந்த முறைப்பாட்டை செய்வதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவரான குறித்த ஜனாதிபதி சட்டத்தரணியுடன் தாம் 22 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமக்கு 18 மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண் பிள்ளகைள் இருப்பதாகவும் அவர்கள் இங்கிலாந்து மற்றும் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் தனது கணவர் மேல் மாடியிலும் தாம் கீழ் மாடியிலும் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் கணவர் இரவில் நண்பர்களுடன் குடித்து விட்டு தம்மை தாக்குவதாகவும் சித்திரவதை செய்வதாகவும் குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



