வெளிநாட்டில் மனைவி - கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு
கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணப் பிரச்சினை
25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரின் மனைவி, 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார். எனினும் பணப் பிரச்சினை காரணமாக மீண்டும் மனைவி வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், பணப்பிரச்சினைக்காக வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam