இலங்கையில் வரிசை இல்லாத ஒரேயொரு எரிபொருள் நிலையம்
இலங்கையில் வரிசை இல்லாத ஒரே எரிபொருள் நிலையம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வித வாடிக்கையாளரும் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை குளியாபிட்டிய தண்டகமுவ ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னெடுத்துள்ளது. அந்த நடைமுறை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நடைமுறை
“Poling without polling” என்ற பெயரில் விண்ணப்ப படிவம் மூலம் இந்த விசேட எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விண்ணப்பம் மூலம், வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்படுகிறது.
இந்த வசதியைப் பெற, தேசிய எரிபொருள் அட்டையில் பதிவு செய்து, QR குறியீட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
மக்களின் பொறுப்பான செயற்பாடு
மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதால் வரிசையின்றி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெறும் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையமாக இது மாறியுள்ளது.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபெருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
