பசில் எதற்காக இந்தியா சென்றார்! - சபையில் ரணில் கேள்வி
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு ஏன் விஜயம் செய்தார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று பேசிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பிய விக்கிரமசிங்க, வெளிநாட்டு நாணய கையிருப்பு குறித்த விவரங்களை கடந்த வாரம் சபையில் முன்வைப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததாகக் கூறினார்.
“இருப்பினும், அரசாங்கம் இதுவரை அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நாங்கள் தேடிய தகவல்களை, எங்களுக்குத் தெரிவிக்காமல், இந்தியாவிடம் முன்வைக்கின்றனர். இந்த தகவலை நிதியமைச்சர் ஏன் எங்களிடம் தெரிவிக்க முடியாது? என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு தற்போது சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கியின் ஆளுநர் இணையத்தள மாநாட்டின் போது தெரிவித்தார். இதை எங்களிடம் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறீர்கள்?
இது உண்மையில் நமது சிறப்புரிமைகளை மீறுவதாகும். பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும். நிதியமைச்சர் இல்லாமல் பட்ஜெட் விவாதம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, “வெளிநாட்டு நாணய கையிருப்பு உள்ளிட்ட நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விரிவான பதில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உரையாடலில் தலையிட்ட சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, நிதியமைச்சர் அவ்வப்போது விவாதத்தில் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்டார். “சிறப்பு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இருக்கும் போது, அவர் அதில் கலந்து கொள்ள வேண்டும். கடந்த நிதி அமைச்சர்களின் நடத்தை பற்றி எனக்கு தெரியும் என்றார்.
வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது எந்தவொரு நிதியமைச்சரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என விக்கிரமசிங்க தெரிவித்தார். "அவர் ஏன் இந்தியாவிற்கு புனித யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புகிறார் என்பதை எங்களிடம் கூற முடியுமா" என்று அவர் கேட்டார்.
சேமசிங்க, “நிதி அமைச்சர் தனது கடமைகளை சரியாகச் செய்துள்ளார். அவர் பல அமர்வுகளில் கலந்து கொண்டார். விக்கிரமசிங்க பல அமர்வுகளில் கலந்து கொள்ளாததுதான் பிரச்சினை.”
விக்கிரமசிங்க: “மற்ற நாடுகளின் முன் அரசாங்கம் மண்டியிடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். பிறகு ஏன் நிதி அமைச்சர் இந்தியா சென்றார்?” இதன்போது சேமசிங்க கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கடமையை விக்ரமசிங்க ஒற்றைக் கையாக செய்து வருகிறார்.
"அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயாவும் (SJB) இது போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை என குறிப்பிட்டார்.