தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? வெளியானது முக்கிய கருத்துக் கணிப்பு
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிக்கப்பட்டுள்ள நிலையில்,
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தல் கள நிலவரம் மக்களின் மன நிலை தொடர்பாக டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இந்த கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிமுக, பாஜக, தேமுதிக இணைந்த அணிக்கு வெறும் 65 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.