31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம்

Sri Lanka Sri Lankan Peoples
By Kamel Oct 06, 2022 08:34 PM GMT
Report

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் | Welfare Assistance To 31 Lakh Families

பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நலன்புரி நன்மைகள் சபையின் (www.wbb.gov.lk) இணையத்தளத்தில் இருந்து எவரும் உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

]

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் ஊடாக தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் உள்வாங்க எதிர்பார்க்கின்றோம்.

நலன்புரி நன்மைகள் சபையின் மூலம் தகுதியான அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கொடுப்பனவுகளை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக சிலர் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.

நலன்புரித்திட்ட உதவிகள்

தற்போது நலன்புரித்திட்ட உதவிகள் பெறும் குழுக்களையும், நலன்புரித்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கும் குழுக்களையும் சரியான முறையில் உள்வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நாம் விரைவில் செயல்படுத்துவோம். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து தகவல்களையும் சேகரித்து, தேவையான, பொருத்தமான மற்றும் சரியான முறையில் கொடுப்பனவை வழங்க இருக்கிறோம்.யாரையும் விட்டு விடாமல் இந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற தேசியப் பொறுப்பில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் | Welfare Assistance To 31 Lakh Families

தற்போது பொது உதவி, நலன்புரித்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறும் பலர் உள்ளனர். அவர்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

தற்போது குறைந்த அளவிலான பயனாளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதனால்தான் பதிவு காலத்தை நீடித்திருக்கிறோம். இதனை மேலும் நீடித்தால் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவது இன்னும் தாமதமாகும்.எனவே இதை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு தரவு கட்டமைப்பொன்று அவசியமாகிறது.

கிராமத்து இளைஞர்களுக்கான பொறுப்பு

விண்ணப்பங்களைப் பெற்று தரவு கட்டமைப்பொன்றை தயாரிக்க இருக்கிறோம். தற்போது உதவித்தொகை பெறுபவர்களும் கட்டாயம் தங்களை பதிவு செய்ய வேண்டும். இதை வெளிப்படைத் தன்மையுடன் செய்ய தரவு கட்டமைப்பை தயாரித்துள்ளோம். கிராமத்து இளைஞர்களுக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளது.

கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இந்த திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்த முடியும். முதியவர்கள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் கிராமங்களில் வாழ்கின்றன. அவர்கள் அனைவரையும் இந்தத் தரவுக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கி அவர்களின் நலன்களை கவனிக்க நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்க்கிறது.

பின்தங்கிய குடும்ப புள்ளிகள் 

விண்ணப்பம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்று குறித்த குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

பின்தங்கிய குடும்பங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையொன்றும் ஆரம்பிக்கப்படும். அதன்படி, அவை தரவு கட்டமைப்பில் சேர்க்கப்படும். இந்த செயல்பாட்டின் கீழ் தெரிவுசெய்யப்படாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.

தகுதியற்ற ஒருவர் இதில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சேபனை முன்வைக்க முடியும். யாருடைய கொடுப்பனவுகளையும் குறைப்பதற்காக இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. வெளிப்படையான முறையில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US