நீர் வெட்டு தொடர்பில் கொழும்புவாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
கொழும்பின் சில பகுதிகளுக்கு வார இறுதியில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை 16 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகள்
இதன்படி கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கொழும்பு 04இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பின் அபிவிருத்தி காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.