அரசியல் கட்சிகளுக்கு மைத்திரி அழைப்பு - செய்திகளின் தொகுப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் எனவும் நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், “பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை 2022 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்துகிறோம்.
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உண்மைத் தன்மையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.
நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
