e-Bill முறைக்கு மாற்றப்படும் நீர் கட்டணப்பட்டியல்
நீர் கட்டண பட்டியல் இனி e-Bill முறைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன் ரூபாக்களை சேமிப்பது, எதிர்காலத்தில் கட்டாய நடைமுறையாக வரவுள்ள தொழிநுட்ப முறைக்குள் பொது மக்களை பழக்கப்படுத்துவது போன்ற பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் e-Bill முறைக்கு மாற்றம் செய்யவுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் பொது மக்கள் மின் இதழ் கட்டணப்பட்டியல் e-Bill முறைக்கு மாறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய இலகுவான நடிவடிக்கைள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri