குழந்தைகள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்மறையான விளைவுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''குழந்தைகள் தொடர்ந்தும், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
டிஜிட்டல் திரைகளை பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்றனர்.
எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை கையடக்க தொலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் திரை பயன்பாட்டிலிருந்து இயலுமானவரை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.'' என அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
