வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
துருக்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட போலியான பிரசாரம் காரணமாக அண்மையில் நூற்றுக்கணக்கானோர் கொழும்புக்கு விரைந்த சம்பவத்தை குறிப்பிட்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உள்ளூர் உரிமம் பெற்ற முகவர் ஒருவரால், துருக்கியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் தனிப்பட்ட தொடர்பு மூலம் இந்த வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போலியான சமூக ஊடக செய்திகள்
கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தால் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இது அறிவிக்கப்படவில்லை என்றும் இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த போலியான சமூக ஊடக செய்திகள் குறித்து அவதானமாக
இருக்குமாறும், இவ்வாறான செயல்கள், நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப்
பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை இழக்கும் என்பதால், குற்றவாளிகளைக் கண்டறிய
அரசாங்கம் தலையிடுமாறும் இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam