இன்னும் 12 வருடங்கள் ரணிலின் ஆட்சி - வஜிர முன்வைத்த யோசனை
ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்கள் வழங்கினால் இலங்கையில் வேலையில்லாதவர்கள் என்ற ஒரு சமூகம் இல்லாது போகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாடு வீழ்ச்சியடையும் போது நாட்டைக் கைப்பற்றுவதே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கடமை கடமையாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்
ஆனால் எமது நாட்டில் அந்த பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.
அத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதற்காகவே இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரை போற்ற வேண்டும்.
மேலும், அன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எமது நாட்டு பொருளாதாரத்தை இன்று ரணில் விக்ரமசிங்க மீட்டெடுத்துள்ளார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
