வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்!

Kilinochchi Mullaitivu Sri Lanka Northern Province of Sri Lanka General Election 2024
By Theepan Nov 14, 2024 01:50 PM GMT
Report

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நிறைவடைந்துள்ளன. 

யாழ்ப்பாணம்

இந்நிலையில், 2 இலட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களில் 36087 பேர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலில் 397041 பேர் வாக்களித்திருந்தனர்.


இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 593187 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 360,954 பேர் வாக்களித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பி.ப 03.00 மணி நிலவரப்படி 47% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

செய்தி-கஜிந்தன்

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 65 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 394 தேர்தல் விதி முறை மீறல்கள் இடம்பெற்றுள்ளதுடன் இன்றைய தினம் 121 விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் உள்ள தேர்தல் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலை 07மணி தொடக்கம் இன்று மாலை 4.00 வரையில் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்ற நிலையில் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து மட்டக்களப்பு பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுவரும் நடவடிக்கைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்காக வேண்டி 22 அரிசியல் கட்சிகள் மற்றும் 27 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தொகுதியில் இருந்து 134,104 பேரும், மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 210,293 பேரும், பட்டிருப்பு தொகுதியில் இருந்து 105,289 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், தபால் மூல வாக்களிப்பிற்காக 14.003 பேரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. 

செய்தி- குமார் 

கிளிநொச்சி

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை மக்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

செய்தி- காண்டீபன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 64.09 வீதம் வாக்கு பதிவு வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையமான முல்லைத்தீவு மகா வித்தியாலயத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று  காலை பத்து மணிவரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.

அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

செய்தி- சதீசன்

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

 மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

அதே நேரம் இதுவரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றது.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்கிலும் காலை நிலவரபடி அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

செய்தி-ஆசிக்

வவுனியா

வவுனியாவில் சுமுகமான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதுடன், இன்று காலை 10 மணி வரை 25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

அவர் மேலும் தெரிவிக்கையில்,  முல்லைத்தீவில் 22.74 வீதமும், மன்னாரில் 18.5 வீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் காலை 10 மணிவரை 22 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி-திலீபன்

வன்னி தேர்தல்மாவட்டத்தில் 65.5சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி,ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! | Voting Begins In Northern Province

அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் 65.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வவுனியாவில் 63.75 வாக்குகளும், முல்லைத்தீவில் 62.45 வாக்குகளும், மன்னாரில்70 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை 4.30மணியளவில் தபால் மூலமான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாலை 7மணியளவில் ஏனைய வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செய்தி-திலீபன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US