டுபாயிலிருந்து செயற்பட்ட போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து!
டுபாய் அரசின் புலனாய்வு அதிகாரிகளின் விசேட தேடுதல் நடவடிக்கைகளால் டுபாயில் ஒளிந்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் மாபியாக்கள் தொடராக கைது செய்யப்படுவதாக டுபாய் அரசாங்கம் இலங்கை பொலிஸிடம் தெரிவித்துள்ளது.
டுபாயில் இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு எவ்வித தடையும் இருக்கவில்லை.
மேலும் எமது நாட்டுக்கு அநேகமாக ஈரான் கப்பல்கள் மூலமே போதைப்பெருள்கள் ஆழ் கடலில் படகுகளுக்கு மாற்றப்படுகின்றன.
டுபாய் புலனாய்வு அதிகாரிகளின் தேடுதல்
இந்த இரு தரப்பினரும் டுபாயில் எவ்வித தடைகளும் இன்றி தங்களின் கடத்தல்களில் ஈடுபட்டு வந்தனர்.இன்றைய போர் சூழலில் டுபாய்க்கு இது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
ஒரு மாதகாலமாக நடைபெறும் ஈரானுக்கு எதிரான போரில் டுபாய் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுத்தது.அதன் பின்னர் டுபாயில் இருந்த ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விற்பனை தொடர்பில் பல தகவல்களை டுபாய் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ளன.
அதை தொடர்ந்து டுபாய் புலனாய்வு பிரிவினர் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.இதன் போது ஈரான் நாட்டவருடன் தொடர்பை பேணி வந்த இலங்கையை சேர்ந்தவர்கள் பெருமளவானவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவரே கொண்டரஞ்சி.இந்த பாதாள உலக குழுவினர் நடத்திச் செல்லும் ஆயுத கடத்தல் மற்றும் விற்பனை டுபாய் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை தொடர்ந்தே இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கையர்களும் கைது செய்யப்படவுள்ளனர்.நேற்றும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் அனைவரும் இலங்கைக்கு அனுபுவதற்காக டுபாய் அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் ஈரான் கப்பல்கள் மூலமே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.