திருகோணமலையில் விவசாயிகளினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பட்டமானது இன்று (29.05.2023) கந்தளாய் - பேராற்றுவெளி சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாயிலுள்ள 10இற்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
விவசாயிகளின் கோரிக்கை
இதன்போது பேராற்றுவெளி சந்தியிலிருந்து, கந்தளாய் மணிக்கூட்டு கோபுரம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக சென்றுள்ளார்கள்.
இதேவேளை விவசாயிகளுக்கு நெல்லுக்கான உரிய விலையினை தா, பசளையை மாணியமாக வழங்கு, உரிய பருவத்தில் நீரினை வழங்கு,விவசாயிகளை புறக்கணிக்காதே,விவசாயிகளே நாட்டின் செலாவாணி,போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஏந்தியவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது ஐம்பதிற்க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
