வட்டுக்கோட்டையில் வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளான வாகனம்
யாழ். வட்டுக்கோட்டை - மாவடி சந்தி பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (17.01.2026) இடம்பெற்றுள்ளது.
மூளாய் பக்கத்தில் இருந்து வந்த குறித்த ஹயஸ் வாகனம் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி பயணிப்பதற்கு திரும்பியுள்ளது.
விபத்து
இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண், வேலி மற்றும் ஹையேஸ் வாகனம் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri