உடைந்து விழும் நிலையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி கட்டடங்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Video)
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி 70 வீதமான பௌதீக பிரச்சினைகளுடனேயே இயங்குகின்றது என வன்னி நாடாளுன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்தி குழு கூட்டங்களில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பாக ஒவ்வொரு முறையும் பேசப்படுகிறது.
70 வீதமான பிரச்சினைகள்
ஆனால் இது தொடர்பில் பார்வையிட்டபோதே இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் அறிய முடிகிறது.
தற்போது 70 வீதமான பிரச்சினைகளோடு இக்கல்லூரி இயங்கி வருகின்றது. போக்குவரத்து வசதியின்மை, குடிநீர்ப்பிரச்சினை, கட்டடங்கள் எல்லாம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த நிலையிலும் கல்வியியற் கல்லூரியை இயக்கும் முதல்வருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை கூறவேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சில திணைக்கள தலைவர்களுடன் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு காலதாமதமாகும் பணிகளை உடனடியாக செய்வதற்கு உத்தரவிட்டிருந்ததுடன், ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலார்களை நிரந்தரமாக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
