காதலர் தினத்தில் பெரும் ஏமாற்றத்தில் வர்த்தகர்கள்
காதலர் தினத்தில் ரோஜாக்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளதாக பூக்கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விற்பனை அதிகரித்த நிலையில்,பெப்ரவரி மாதம் பூ விற்பனை குறைந்துள்ளது.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
இறக்குமதி செய்யப்பட்ட பூக்களுக்கு வரி
தற்போதைய பொருளாதார சிக்கல்கள் மற்றும் பூக்களின் அதிக விலை காரணமாக, முந்தைய ஆண்டுகளை விட பூ விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பூக்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள், நுவரெலியா மற்றும் பதுளையில் பூ அறுவடை குறைந்ததால் இந்தியாவில் இருந்து பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் மற்றும் போக்குவரத்து மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதற்கமைய, சிவப்பு ரோஜா: ரூ. 350 , பூங்கொத்து: ரூ. 2,500 - ரூ. 3,000 மற்றும் சிறப்பு பூங்கொத்து: ரூ. 8,000 - ரூ. 12,000 என தகவல்கள் தெரிவிக்கின்றன.