பிரான்ஸில் அறிமுகமாகவுள்ள தடுப்பூசி கடவுச்சீட்டு! பெரும்பான்மை மக்கள் ஆதரவு
பிரான்ஸில தடுப்பூசி போட்டவர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை குறித்து பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கடவுச்சீட்டு மூலம் விமானப் பயணம் அல்லது பிற சேவைகளை இலகுவாகப் பெற முடியும். எனினும் இந்த யோசனையை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ள போதிலும் அதனை நிகராகரிக்கவில்லை என பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய கருத்துக் கணிப்பில், ஐந்தில் மூன்று பகுதியினரான, 62 வீதமானோர் இந்த யோசனைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை கட்டாயமாக்குவதற்கான யோசனையை ஆதரித்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கருத்து குறித்து தாம் முன்கூட்டியே விவாதிக்க ஆரம்பித்து விட்டோம் எனவும், இது மிகவும் வரைவான தீர்மானமாகும் என ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் க்ளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் முன்கூட்டிய விவாதமாகும். மற்றவர்களை விட சிலருக்கு மாத்திரம் அதிக உரிமைகளை வழங்கும் கடவுச்சீட்டு இருப்பது அதிர்ச்சியாக இருக்கும். இது தடுப்பூசியின் அவசியத்தை வழங்கும் விழிப்புணர்வாக இருக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் தரப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.
நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்றால் இந்த கடவுச்சீட்டு கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி கடவுச்சீட்டை விடுதிகள் மற்றும் உணவகங்கள் அல்லது பல்கலைக்கழக விரிவுரைகள் போன்ற பல்வேறு வகையான சேவைகளை அணுக பயன்படுத்தலாம் என முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த கடவுச்சீட்டு கட்டயமாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அரசாங்கம் இந்த திட்டத்தை நிராகரிக்காமல் தொடர்ந்து ஆராயந்து வருவதனால் வெகு விரைவில் இந்த கடவுச்சீட்டு அமுலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021