ஆட்கடத்தல்களைத் தடுப்பது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி
ஆட்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பில் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமொிக்கா சிறப்பு பயிற்சிகளை அளித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகமும் இணைந்து இலங்கையில் பாதுகாப்பான குடியகல்வை ஊக்குவிப்பதற்கும், ஆட்கடத்தலைத் தடுப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆட்கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு
அதற்கமைய சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அனுசரணையுடன் இலங்கையைச் சேர்ந்த 69 அதிகாரிகளுக்கு குடியகல்வு சட்டம் மற்றும் கொள்கை தொடர்பில் சான்றிதழ் கற்கைநெறி வழங்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் அவ்வதிகாரிகள் ஆட்கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதற்கு அவசியமான அறிவையும் திறன்களையும் பெற்றிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam