கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா
கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஒன்- அபோலிஸ் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவை சென்றடைந்த விடயம் சர்வதேச சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நீர்மூழ்கி கப்பல் நேற்றையதினம்(24.07.2023) தென்கொரியாவின் தென்பகுதித் தீவான ஜெஜு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
கொரியப் போருக்குப் பின்னர், நாற்பதாண்டுகள் கழித்து, முதல் முறையாக, கடந்த வாரம் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டது.
வடகொரியா எச்சரிக்கை
யுஎஸ்எஸ் கெண்டக்கி எனும் அமெரிக்காவின் குறித்த கப்பல் 1980ற்கு பின்னர் முதன்முறையாக தென்கொரியாவை சென்றடைந்துள்ளது.
வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில், தென்கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த தருணத்தில் யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பல் மற்றும் தற்போது வருகை தந்துள்ள ஒன்- அபோலிஸ் கப்பல்களின் வருகையானது வடகொரியாவை அமெரிக்கா சீண்டுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் வருகையை எச்சரிக்கும் முகமாக வடகொரியா இரண்டு பொலிக்ஸ்ட்டிக் வகை ஏவுகணைகளை தென்கொரிய கடற்பரப்பில் செலுத்தி தங்கள் வலுவைக் காட்டியுள்ளது.
அதைத் தொடர்ந்தும் கடந்த சனிக்கிழமை தாழ்வாகப் பறந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் சிறு இறக்கை ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.
அமெரிக்கப் படை
இரண்டு தரப்பும் தங்களின் படை பலத்தைக் காட்டிவருவதால், கொரியத் தீபகற்பப் பகுதியில் போர்ப் பதற்றம் கூடியுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்கப் படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ், ஒன்- அபோலிஸ் ஆகிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தென்கொரியாவுக்கு வருகைதந்துள்ளன.
மேலும் தற்போது வருகைதந்துள்ள நீர்மூழ்கிக் கப்பலானது இதற்கு முன்ன்ர் தென்கொரியாவிற்கு வருகைதந்த யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பலை போல் இல்லை எனவும், அணு ஆயுதங்களைக் கொண்டது அல்ல என்றும், எதிரித் தரப்பு கப்பல்களை அழிக்கக்கூடியது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
