இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்துடன் கைகோர்க்கும் அமெரிக்கா
இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே எடுத்துச்செல்லப்பட்ட நிதியை மீட்பதற்கு உதவ தயாராக உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.
டொனால்ட் லு, இன்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை(Anura Kumara Dissanayake) சந்தித்து கலந்துரையாடியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்க(USA) அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார்.
ஊழல் எதிர்ப்புத் திட்டம்
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக டொனால்ட் லு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவையும் லூ மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது கருத்துரைத்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, புதிய மற்றும் மேம்பட்ட அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் ஊழல் மற்றும் வீண் விரயப் பிரச்சினைகளை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam