பாரசீக வளைகுடாவுக்கு இரையாகப் போகும் அமெரிக்க படைகள்! ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய இராணுவத்தின் தலைமைப் பேச்சாளர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
உலகில் உள்ள எந்தவொரு பொது இடமும், பூங்காக்களும் அல்லது சுற்றுலாத் தலங்களும் இனி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான இடங்களாக இருக்காது என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா தனது 57,000 துருப்புக்களை வளைகுடா பகுதியில் குவித்து வருவது குறித்து ஈரான், "அமெரிக்க வீரர்கள் தரைவழியாக நுழைந்தால், அவர்களைத் தீயிட்டுப் பொசுக்க எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கார்க் தீவைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், "எங்கள் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு முழு பாதுகாப்பில் உள்ளது, எதையும் எதிர்கொள்ளத் தயார்" என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட மேலும் பல முக்கிய தகவல்களை சுமந்து வருகின்றது எமது கழுகு பார்வை நிகழ்ச்சி,