ஈரானிய எண்ணெய் விற்பனையை முற்றாக முடக்கிய அமெரிக்கா..! எச்சரிக்கும் ஆய்வாளர்
ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் திட்டம், ஈரானியப் போரை மேலும் தீவிரப்படுத்துவதாகும் என்றும், அமைதி ஒப்பந்தம் கிடைக்காததால் ஏற்பட்ட ட்ரம்பின் கோபத்தை இது பிரதிபலிக்கிறது என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஜஸ்டின் க்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் எண்ணெய் விற்பனை தடை
இந்த முன்மொழிவுகள், சீனா போன்ற தனது வாடிக்கையாளர்களுக்கு ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதைத் தடுக்கும் என்றும், இது ஈரான் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவும் ஈரானும் தங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் சாதகமான நிலையில் இருப்பதாக உணர்வதாகவும், இரு தரப்பினரும் மற்றொருவரை வீழ்த்துவதன் மூலம் தாங்கள் உண்மையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.
இது மேலும் பதற்றத்தையும் சீர்குலைவையும் ஏற்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள நிலையில், விவாதிக்க எதுவும் இல்லை என்றால், அது மிக விரைவாக முடிவுக்கு வந்திருக்கும் என்றும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.