அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தொடர்பில் வதந்தி: அமெரிக்க தூதரகம் மறுப்பு
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வோசிங்டனுக்கு திரும்ப அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன், இலங்கை தொடர்பான முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்
ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும், அண்மையில் ட்விட் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இது குறித்து ஆராய்ந்த போது அது பொய்யான செய்தி என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், வோசிங்டனுக்கான தூதுவர் ஜூலி சங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், அந்த ட்வீட் முற்றிலும் போலியானது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ஜோ பைடனால் 2022இல் ஜூலி சங் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
