உதவ யாருமின்றி தனிமையில் வாழும் சகோதரிகள்! துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியங்கள் (VIDEO)
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்தும் எமது முன்னாள் போராளிகளின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், முறிகண்டி- அரை ஏக்கர் காணி பகுதியில் தனிமையும், முதுமையும், வறுமையும் ஒன்று சேர வாழும் சகோதரிகள் உதவ யாருமின்றி தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 21 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri