ரணில் அநுர குறித்து ஐக்கிய தேசியக்கட்சி வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை எதுவும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது.
கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
அநுரவுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடு
அநுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியை முறியடித்து, எதிர்க்கட்சியில் சக்தி வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது என்பதையே ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார்.

இது ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனத்தால் ஏற்பட்டுள்ளது என்பதையே அவர் வலியுறுத்தி வருவதோடு, அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடு இது அல்ல என்று அகில விராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் உள்ளதாக அகில விராஜ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 5 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam