சவூதி கடலில் ஒரு மணி நேரத்திற்குள் நடந்த இரண்டு சம்பவங்கள்! வெளியான எச்சரிக்கை
UK Maritime Trade Operations (UKMTO) அமைப்பு, சவுதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு கன்டெய்னர் கப்பலின் அருகே “அறியப்படாத இரண்டு ஏவுகணைகள் அருகில் விழுந்தன” எனப் பதிவானதைத் தொடர்ந்து “சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள்” குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் ஒரு மணி நேரத்திற்குள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 சம்பவங்கள்
கப்பல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
UKMTO WARNING 028-26
— UKMTO Operations Centre (@UK_MTO) March 30, 2026
Click here to view the full Warning⤵️ https://t.co/6ng3KeERjY#MaritimeSecurity #MarSec pic.twitter.com/ANmJbIYUkR
போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா பகுதி, ஹோர்மூஸ் மற்றும் ஓமான் வளைகுடா பகுதிகளில் இயங்கும் கப்பல்களை பாதித்த 24 சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக UKMTO தெரிவித்துள்ளது.
UKMTO என்பது ரோயல் கடற்படை தலைமையிலான அமைப்பாகும்.
இது வணிகக் கப்பல் சேவைகள் மற்றும் இராணுவப் படைகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி, கடல் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
"வீட்டு முன் சண்டையிட வேண்டாம்" எனக் கூறிய மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை - பாணந்துறையில் பயங்கரம்