பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு (Video)
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியா
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இன்றய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போராட்டத்தை மேற்கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக 107 வீத சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றோம்.
அந்தவகையில் அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின் சம்பள
முரண்பாட்டை உடனடியாக தீர்ப்பதுடன், முன்னமே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் 107 வீத அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வை வழங்கு, 107 வீத சம்பள அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்து சம்பள முரண்பாட்டை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆசிரியர் - பாலநாதன் சதீஸ்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தங்கியிருந்தனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் மட்டக்களப்பில் உள்ள சௌக்கிய விஞ்ஞான பீடத்திற்கு முன்பாகவும் கல்லடி, நாவற்குடா சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாகவும் இந்த அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் - கிருஷ்ண குமார்



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri