யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(photos)
யாழ்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்று முதல் சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(21) யாழ்பாண அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து
யாழில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.
தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாதமையை கண்டித்தும் மேலும் யாழ்.சாலையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் இன்றைய தினம் (22) தமது பேருந்துகள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

உடனடியாக இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இரு தரப்பினருடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் தாம் வழமைபோல் சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ். செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri