யாழில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(16) காலை 9.30 மணியளவில் யாழ். நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வினை முன்னெடுத்துள்ளனர்.
துண்டுப்பிரசுரம் வழங்கல்
இந்தநிலையில், ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதனையடுத்து, யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணியும் துண்டுப்பிரசுரம் வழங்கலும் இடம்பெற்றதுடன் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளின் பிரச்சினை
பட்டம் பெற்றுவிட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக வீதியை கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்பட்டுள்ளன.

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri