ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு
யாழ்ப்பாணத்திற்கான(Jaffna) விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோவில் விதியில் அமைந்துள்ள IOM அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த உயர்ஸ்தானிகர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், மத குருமார்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.






புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
