ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - பதவி விலகுமாறு கடும் அழுத்தம்
மனித உரிமை மீறல்களை மூடி மறைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று 18 நாடுகளும் 230 அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனால் ஆரம்பமாகியுள்ள 50வது மனித உரிமைகள் மாநாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தக் கோரிக்கையை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
சக்திவாய்ந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம்
மனித உரிமை மீறல்களைச் செய்த சக்திவாய்ந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிச்செல் பச்லெட், அந்த நாட்டுக்கு எதிராக எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிச்செல் பச்லெட் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையில், மிச்செல் பச்லெட்டின் மகன் Sebastian Dwight, மோசடி நடவடிக்கையில் சிக்கியதால், சிலி அரச நிறுவனத்தின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.