தானியங்களைக் கொள்ளையிட்டு தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை கைப்பற்றிய உக்ரைன்
ரஷ்யா(Russia) ஏற்றுமதி செய்த உக்ரைனுக்கு சொந்தமான தானியங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து உக்ரேனிய தானியங்களை அந்த கப்பல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி
இதன்போது கப்பலின் மாலுமியையும் உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலானது ஏற்கனவே ஒருமுறை கிரிமியா பகுதியில் இருந்து தானியங்களுடன் வெளியேறியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Usko Mfu என்ற அந்த கப்பல் மற்றும் அதன் மாலுமிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அஜர்பைஜான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட அந்த மாலுமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், இதுவரை இந்த விவகாரத்தில் முறையான தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam