செம்மணி விவகாரம்! பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்..
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று வெள்ளிக்கிழமை (15) கவணயீர்ப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பில் தமிழர்கள் மீதான வன்கொடுமையின் 'கறுப்பு ஜூலை' என்று நினைவுகூரப்படுகின்ற காலப்பகுதியின் நீட்சியையும், எதிர்வரும் 'சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்' பேரெழுச்சியையும் கருத்தில்கொண்டு இந்தக் காலப்பகுதியில் பிரித்தானியப் பிரதமருக்கான மனு கையளிப்பும் இடம்பெற்றுள்ளது.
செம்மணி மனித புதைகுழி
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தது.
‘‘2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைவடைந்து 16ஆண்டுகளை கடந்தும் தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி இன்னமும் கிடைக்கவில்லை.
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். யுத்தத்தின் போது பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
அதேபோன்று ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். ஆனால், அவர்கள் தொடர்பில் எவ்வித தரவுகளும் இல்லை.
சர்வதேச விசாரணை
அவர்களுக்கு என்ன நடந்தது என இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த மறுப்பதுடன், அதனை மூடிமறைக்கும் செயல்பாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக தோண்டப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 50இற்கும் மேற்பட்ட உடல்கள் மரபணு பரிசோதனைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளன.
சிறுவர்கள் முதல் பெரியவர்களில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த விடயத்தில் நீதியான சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும்.
கடந்தகாலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான சாட்சியங்களை மூடிமறைக்கும் செயல்பாடுகளையே முன்னெடுத்திருந்தன.
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணையின் அவசியத்தை எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தி வேண்டும்.‘‘ என இந்த 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' நடைப்பயணத்தில் பங்கேற்ற தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.













Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
